மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (12:27 IST)
மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (12:27 IST)
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மும்பை நோக்கி நேற்று காலை 8.20 மணிக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 150 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் விமானம் வெடித்து சிதறும் என்றும் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர, அவசரமாக தரையிறக் கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர், அவர்களது உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு படையினர் விமானத்தில் சோதனையிட்டனர். அதில், சந்தேகத்துக்கு இடமாக எந்தவொரு பொருளும் சிக்கவில்லை. எனவே வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல் புரளி என்பது பின்னரே தெரியவந்தது. யாரோ விஷமிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர். அது புரளி என்பதை அறிந்த பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதனிடையே, மும்பை விமானத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி பயன்படுத்திய தொலைபேசி எண்ணை ஆராய்ந்தபோது, அவர் புனே-சோலாப்பூர் சாலையில் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக போலீசார் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் சஞ்சீவ் மிஸ்ரா (வயது 38) என்பதும், ஒடிசாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அனிமேஷன் துறையில் வல்லுனரான இவர், ஏற்கனவே மும்பை மற்றும் புவனேஸ்வர் விமான நிலையத்தில் போலீசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால், போலீசாரை வேதனைப்படுத்துவதற்காக இந்த குறும்புதனத்தை கையாண்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
