கஜூராஹோ நிர்வாண சிலைகளுக்கு அமைச்சர் புடவை கட்டி விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்: நயன்தாரா சாகல்
பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (11:45 IST)
மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (11:45 IST)
கஜூராஹோ நிர்வாண சிலைகளுக்கு
அமைச்சர் புடவை கட்டி விடும் நாளுக்காக
காத்திருக்கிறேன்: நயன்தாரா சாகல்
இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கருத்துக் கூறி முதன் முதலாக சாகித்ய அகாடமி விருதை திருப்பியளித்தவர் எழுத்தாளர் நயன்தாரா சாகல். இவரைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடந்த டாடா ஸ்டீல் கொல்கத்தா இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட இவர், “இந்துத்துவக் கொள்கைகளுக்கு உட்பட்டே நாட்டில் பல சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கஜூராஹோ கோவிலில் உள்ள நிர்வாண சிலைகள் மிகவும் ஆபாசமாக இருப்பதால் நாட்டின் கலாச்சார அமைச்சரே, அவற்றிற்கு புடவையால் மறைத்துவிடும் நாளுக்காக காத்திருக்கிறேன். நாட்டில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் கற்களால் தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது கருப்பு மை ஊற்றப்படுகிறது. ஏன் கொலை கூட செய்யப்படுகிறார்கள். இதற்கெல்லாம் அரசின் பதில் வெறும் மவுனம் மட்டும்தானா? அல்லது அரசு தனது இந்துத்துவக் கொள்கையை பாதுகாப்பதிலேயே தீவிரமாக இருக்கிறதா?.
அவர்(பிரதமர் மோடி) ஒரு போதும் இந்தியாவை இந்து நாடாக மாற்றப் போவதாக கூறவில்லை. ஆனால் தற்போது இது அரசின் கொள்கையாகிவிட்டது. நாம் விரும்பாத ஒன்றிற்கு நாம் வலிந்து மாற்றப்படுவதற்கு முன்பாகவே, எங்களது கருத்துடன் ஒத்துப் போகும் நபர்களுக்கு, இந்தக் கொடுமைகளுக்கெதிராக எழுந்து நின்று போராட வேண்டிய கடமை இருக்கிறது’’ என்று அவர் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
