சிறைகளில் நடந்த லோக் அதாலத்தில் 406 கைதிகள் விடுதலை: சட்டப்பணி ஆணைக்குழு தகவல்
சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு சட்டவிழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களது வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர சிறையில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்தவும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு, தேசிய சட்டப்பணி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் லோக் அதாலத் மற்றும் சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த லோக் அதாலத்தில், சிறு குற்றங்கள் தொடர்பான 941 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் கைதிகள், சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக எடுத்துக்கொண்டு, அவர்களை விடுதலை செய்து லோக் அதாலத் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வாறு நேற்று மட்டும் 451 வழக்குகள் முடிவுக்கு வந்து, 406 கைதிகள் விடுதலை ஆகியுள்ளனர்.
2016-01-24



சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
