சீறிப்பாய்ந்து வந்த திகிலூட்டும் அலை: முத்தத்தை பரிமாறிக்கொண்ட ஜோடிகள்! (வீடியோ இணைப்பு)
சிட்னியின் ராயல் தேசிய பூங்காவில் (Sydney's Royal National Park) உள்ள கடற்கரையை பார்வையிடுவதற்காக பர்வையாளர்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்நிலையில், நேற்று இந்த கடற்கரை ஓரம் மக்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திகிலூட்டும் அலை ஒன்று ஆக்ரோஷமாக எழுந்து வந்துள்ளது.
இதனை எதிர்பார்க்காமல் விளையாடிக்கொண்டிருந்த, சுமார் 100 பேர் அந்த அலையில் மூழ்கடிக்கப்பட்டு திணறியுள்ளனர்.
இதில் ஒரு நிகழ்வாக ஒரு ஜோடியினர், கடலில் விளையாடிக்கொண்டே முத்தத்தை பரிமாறிக்கொள்ளும்போது, இவர்களின் பின்னால் எழுந்து வந்த அலை அவர்களையும் மூழ்கடித்தது.
இவர்கள் இருவரும் கட்டியணைத்துக்கொண்டு இருப்பது, இவர்களின் பின்னால் அலை சீறிப்பாய்ந்து வருவது போன்ற காட்சிகள் மற்றும் அலையில் மக்கள் மூழ்கடிக்கப்படுவது போன்றவற்றை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த அலையினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக இரண்டு மீட்பு ஹெலிகொப்டர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் 22 வயது பெண்ணின் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் 53 வயது பெண்மணி ஒருவரின் கணுக்கால் உடைந்து அவதிக்குள்ளாகியுள்ளார்.
மேலும் 20 வயது பெண் ஒருவரும் பாதிப்படைந்துள்ளார்.
இதில், பாதிக்கப்பட்ட 3 பெண்களும் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இக்கடற்கரைக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் நடப்பயிற்சி மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
