7ஆவது தடவையாக தெற்காசியாவின் சம்பியனானது இந்தியா : அடுத்த தொடர் பங்களாதேஷில்

கதிரவன்  கதிரவன்
7ஆவது தடவையாக தெற்காசியாவின் சம்பியனானது இந்தியா : அடுத்த தொடர் பங்களாதேஷில்

இந்த சம்­பியன் பட்­டத்­துடன் 7ஆவது முறை­யாக இந்­தியா சம்­பி­யனா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­வேளை 12 ஆவது தெற்­கா­சியக் கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடரை நடத் தும் வாய்ப்பு பங்­க­ளா­தே­ஷிற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. கடந்த இரண்டாம் திகதி நடை­பெற்ற சாவ் நிர்­வாகக் குழு கூட்­டத்­தி­லேயே இம்­மு­டிவு எட்­டப்­பட்டுள்­ளது.

சாவ் தலை­வ­ரான காசி சலா­வூதீன் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளா­த­தினால், பிரதி தலை­வ­ராக செயற்­பட்ட இலங்கை கால்­பந்து சம்­மே­ள­னத்தின் முன்னாள் தலை­வரும் தற்­போ­தைய ஊடக மற்றும் தொடர்­பாடல் அதி­கா­ரி­யு­மான ரஞ்சித் ரொட்­ரிகோ கூட்­டத்தை வழி­ந­டத்­தினார்.

இதில் பல தீர்­மா­னங்கள் எட்­டப்­பட்­டுள்­ளன. அதன்­படி மக­ளி­ருக்­கான தெற்­கா­சியக் கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடர் எதிர்­வரும் ஆகஸ்ட் மற்றும் செப்­டெம்பர் மாதங்­களில் இந்­தி­யாவில் நடை­பெ­றவிருக்­கி­றது. அத்­தோடு 2017ஆம் ஆண்­டுக்­கான தெற்­கா­சிய கால்­பந்து போட்­டி­களை பங்­க­ளாதேஷ் நடத்­து­கி­றது.

அதே­வேளை நடைபெற்றுமுடிந்த தெற்காசியகால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பிரதம விருந்தினராகவும் ரஞ்சித் ரொட்ரிகோ கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

2016-01-05

மூலக்கதை