முகம்மது நபியின் கேலிச் சித்திரத்தினை வெளியிட்ட பத்திரிகை மீது தாக்குதல் முயற்சி

  NEWSONEWS
முகம்மது நபியின் கேலிச் சித்திரத்தினை வெளியிட்ட பத்திரிகை மீது தாக்குதல் முயற்சி

இதன்போது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாக்குதலானது மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாணியில் இடம்பெற இருந்ததாகவும் அதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோபன்ஹெகன் நகரில் உள்ள இப் பத்திரிகை நிறுவனமானது கடந்த 2005 ஆம் ஆண்டில் முகம்மது நபியின் கேலிச் சித்திரத்திங்களை தனது பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தது.

மேற்படி சித்திரமானது அக்காலப்பகுதியில் உலகலாளவிய ரீதியில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இதற்கெதிராக இஸ்லாமியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட இக்குழுவானது குறித்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நுழைந்து தங்களால் முடிந்த அளவில் கொலைகளை நடத்தத் திட்டமிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை