மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்
காலப் என்ற ஆய்வு நிறுவனம் 2010 குளோபல் வெல்பீயிங் என்ற பெயரில் 124 நாடுகளில் விரிவான ஆய்வு நடத்தியது. அதில் அன்றாட வாழ்க்கையில் திருப்தி, திணறல், அவதி என்ற 3 பிரிவுகளில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 124 நாடுகளில் ஆய்வில் பங்கேற்ற மக்களிடம் தங்கள் தினசரி வாழ்க்கை அடிப்படையில் 0 முதல் 10 வரை மதிப்பெண் தர கேட்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் 7 அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் அளித்தவர்கள் அதிகம் கொண்ட நாடு பட்டியலில் முன்னிலை பெற்றது. 6 முதல் 4 வரை மதிப்பெண் அளித்தவர்கள் திணறல் மற்றும் 4க்கு குறைவாக கூறியவர்கள் அவதி ஆகிய பட்டியலில் இருப்பதாக கருதப்பட்டது.
மக்களின் நலம் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் டென்மார்க் முதலிடம் பிடித்தது. அந்நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக கூறினர்.
69 சதவீதத்துடன் சுவீடன், கனடா இரண்டாவது இடம்பெற்றன. அவுஸ்திரேலியா 66 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பின்லாந்து, வெனிசுலா(64), இஸ்ரேல், நியூசிலாந்து(63), நெதர்லாந்து, அயர்லாந்து(62), பனாமா(61), அமெரிக்கா(59) என அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
