மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்
காலப் என்ற ஆய்வு நிறுவனம் 2010 குளோபல் வெல்பீயிங் என்ற பெயரில் 124 நாடுகளில் விரிவான ஆய்வு நடத்தியது. அதில் அன்றாட வாழ்க்கையில் திருப்தி, திணறல், அவதி என்ற 3 பிரிவுகளில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 124 நாடுகளில் ஆய்வில் பங்கேற்ற மக்களிடம் தங்கள் தினசரி வாழ்க்கை அடிப்படையில் 0 முதல் 10 வரை மதிப்பெண் தர கேட்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் 7 அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் அளித்தவர்கள் அதிகம் கொண்ட நாடு பட்டியலில் முன்னிலை பெற்றது. 6 முதல் 4 வரை மதிப்பெண் அளித்தவர்கள் திணறல் மற்றும் 4க்கு குறைவாக கூறியவர்கள் அவதி ஆகிய பட்டியலில் இருப்பதாக கருதப்பட்டது.
மக்களின் நலம் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் டென்மார்க் முதலிடம் பிடித்தது. அந்நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக கூறினர்.
69 சதவீதத்துடன் சுவீடன், கனடா இரண்டாவது இடம்பெற்றன. அவுஸ்திரேலியா 66 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பின்லாந்து, வெனிசுலா(64), இஸ்ரேல், நியூசிலாந்து(63), நெதர்லாந்து, அயர்லாந்து(62), பனாமா(61), அமெரிக்கா(59) என அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
