டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக ஷ்மிட் தெரிவு
அவரின் இடதுசாரி கூட்டணி தற்போதைய பிரதமர் லார்ஸ் ரோக்கே ராஸ்முசனின் கூட்டணியைத் தோற்கடித்துள்ளது. டென்மார்க்கில் நேற்று தேர்தல் நடந்தது.
இதில் ஹெல்லி தார்னிங் ஷ்மிட்டின்(46) டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. 4 கட்சிகள் கொண்ட இந்த இடதுசாரி கூட்டணி டென்மார்க் நாடாளுமன்றத்தில் உள்ள 179 இடங்களில் 89 இடங்களை கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் தவறு செய்யமாட்டோம். இன்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளோம் என்று ஷ்மிட் தெரிவித்தார்.
திருமதி. ஷ்மிட் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தார். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் புரூகஸில் உள்ள யூரோப்பியன் கல்லூரியில் படித்தார். டானிஷ் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசகராக பணி புரிந்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷ்மிட் கட்சி படுதோல்வி அடைந்தது.
தினசரி வேலை நேரத்தில் 12 நிமிடங்கள் அதிகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனால் உற்பத்தி பெருகும் என்றும், அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தற்போதைய பிரதமர் ராஸ்முசன் உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
