அவுஸ்திரேலிய கடற்கரையில் சுறாக்களின் அட்டகாசம்! பயணிகள் செல்ல அச்சம்
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 60 சுறாக்கள் Windang கடற்கரை பகுதியில் இறங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுறாக்களில் பெரும்பாலானவை Hammer Heads Whale. இவைகளின் அளவு 2.5 மீட்டரிலிருந்து 3.5 மீட்டர் வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று Jervis Bay-லும் 30 சுறாக்கள் மேற்பரப்பில் காணப்படுகிறது. இவைகள் Bronze Whales-ஆக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
Kembla துறைமுக பகுதியில் உலா சென்றவர் ஒரு சுறாவை பார்த்ததாக கூறியதால், ரோந்து படையினர் வான்வழியாக சென்று பார்த்தபோது, அது உண்மைதான் என்றும் அந்த சுறாவின் அருகில் மேலும் ஐந்து Hammer Heads சுறாக்கள் காணப்படுவதாகவும் தகவல் அளித்தனர். இதுமட்டுமின்றி Warilla என்ற பகுதியிலும் சுறாக்கள் காணப்படுகின்றன.
இப்படி பல பகுதியிலும் சுறாக்கள் கரைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளன. சுறாக்கள் கரைபகுதியில் இறங்கியுள்ள நிலையில் மக்களும் இறங்கி சுறாவுக்கு பலியான சம்பவங்கள், அவுஸ்திரேலியாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகமாகவே நடந்துள்ளது.
ஆழமும் அலைகளும் குறைந்த இந்த பகுதியில்தான் அங்குள்ள மக்களும் சுற்றுலாப் பயணிகளும் நீச்சல் மற்றும் மிதவை கருவிகளில் பொழுதுபோக்காக விளையாடுவார்கள். ஆளையே கொல்லும் இந்த அபாய சுறாக்கள் முதலைக்கும் மேலானது.
மக்களின் மகிழ்ச்சி கடலானது துன்ப கடல் ஆவதை தவிர்க்கவே, கரைகடல் கடந்து ஆழ்கடல் பகுதிக்கு சுறாக்கள்செல்லும் வரை, மக்கள் கடலுக்குள் இறங்காதிருக்கும் வண்ணம் தடுப்பு நடவடிக்கையை கடற்கரை பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
