தடையை எதிர்த்து செப் பிளாட்டர் மேல்முறையீடு
உலகளவில் கால்பந்து நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு முக்கிய நபர்களான செப் பிளாட்டர் மற்றும் மிஷேல் பிளாட்டினி ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தான் கொள்கை அடிப்படையில் நடந்துகொள்ளும் ஒரு மனிதர் எனத் தெரிவித்துள்ள செப் பிளாட்டர், தன்மீதான தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.
தன்மீது அவதூறுகள் சுமத்தப்படுவது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு பிளாட்டினிக்கு இரண்டு மில்லியன் டாலர்களை செப் பிளாட்டர் சட்டவிரோதமாக அளித்தார், அவ்வகையில் அந்த இருவரும் ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளின் மீறினர் என்று அந்த அமைப்பின் விசாரணை ஒன்று கண்டறிந்தது.
ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான குழுவிடம், பிளாட்டினிக்கு அளித்த தொகை, நியாயமானதே என்பதை தான் தெளிவுபடுத்தியதாகக் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
அவர்கள் அந்த எட்டு ஆண்டுகளுக்கு எவ்விதத்திலும் கால்பந்து விளையாட்டுடன் தொடர்புபட முடியாது என சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா இன்று அறிவித்தது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
ஆனால் செய்தியாளர் ஒருவரோ, ஃபிஃபா நிர்வாகமே கடந்த பல மாதங்களாக கொந்தளிப்பில் இருந்துள்ளது என்றும், ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனவும் கூறுகிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
