மணிக்கு 213 கி.மீ வேகத்தில் சிட்னி நகரை தாக்கிய புயல்: வீடுகள், கட்டிடங்கள் பலத்த சேதம் (வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை இன்று பெரிய புயல் ஒன்று தாக்கியது.
மணிக்கு 213 கிலோ மீற்றர் வேகத்தில் ஒரு அதிவிரைவு ரயிலை போன்று அந்த புயல் தாக்கியது.
புயலுடன் கிரிக்கெட் பந்தின் அளவில் ஆலங்கட்டி மழையும் விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
சுழற்றியடித்த புயல் காற்றுடன் தொடர்ந்து பெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.
கார்கள் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டு குப்புற கவிழ்ந்து கிடந்தன. மேலும் ஆலங்கட்டி மழையின் காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.
ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு செல்லும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
சிட்னி நகரின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் வானிலை மையத்தில் பதிவானதிலேயெ இது தான் வலிமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த சேதமடைந்த சிட்னியின் குர்னெல் பகுதி இயற்கை பேரழிவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிபோயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
