பாகிஸ்தான் லாகூரில் பாதுகாப்பு மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம்:ராஜீவ் சுக்லா
Saturday, 21 November 2015 08:20
பாகிஸ்தான் லாகூரில் பாதுகாப்பு மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளை அச்சமின்றி நடத்தலாம் என்று பிசிசிஐ உறுப்பினரான ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிடுவது என்பது இழுபறியாக நீடித்து வருகிறது. எனவே, இதுக்குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ராஜீவ் சுக்லா ஆலோசனை தெரிவித்துள்ளார். அதன் படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அரபு, அமீரக நாடுகளை நம்பி இருக்காமல் பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள மைதானத்தை மேம்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தமது கிரிக்கெட் தொடர்களுக்கு அரபு அமீரக நாடுகளையே நம்பி இருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். எனவே, பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டுக்களை விளையாட தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும், இதையடுத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் போட்டிகளை நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.
அதோடு லாகூரில் ஒட்டு மொத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து பின்னர் அங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாமே என்று ஆலோசனை கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
