இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை: பிசிசிஐ

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இந்தியாபாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை: பிசிசிஐ

Thursday, 12 November 2015 06:29

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுக் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், இதுக்குறித்த மத்திய அரசின் ஆலோசனையை அறிய விரும்புவதாகவும் பிசிசிஐ மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.மத்திய அரசு இதுக்குறித்த முடிவை விரைவில் தெரிவிக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்படி மத்திய அரசு அனுமதி வழங்கும் நிலையில் வருகிற டிசம்பர் மாதம் இதியாவில், இந்தியா-பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிய வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இதுக்குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்தார். அப்போது சிவசேனா எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் பேச்சுவார்த்தை நடத்தாமலே பாகிஸ்தான் கிளம்பிச் சென்றார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

மூலக்கதை