ஐபிஎல்லின் புதிய அணி ஒன்றை தோனி வாங்கத் திட்டம்
Wednesday, 11 November 2015 07:26
ஐபிஎல் கிரிகெட் அணிகளில் புதிதாக இடம்பெற உள்ள இரண்டு அணிகளில் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வாங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூதாட்டப் புகார் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்கக் கூடாது என்று, நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு உத்தரவிட்டு உள்ளது.எனவே, இந்த இரண்டு அணிகளுக்குப் பதிலாக புதிய அணிகளை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும் என்கிற நிலையில், இப்போது புதிதாக இரண்டு அணிகள் போட்டிகளில் இடம்பெறும் என்பது உறுதியாகி உள்ளது.
புதிதாக சேர்க்கப்படும் இரண்டு அணிகளில் ஒன்றை தோனி வாங்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.இருப்பினும் இதுக்குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை வருகிற டிசம்பர் மாதம் 8ம் திகதிக்குள் தெரிய வரும்.