ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Wednesday, 18 November 2015 09:46

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2013ம் ஆண்டு நடைப்பெற்ற 6 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவான் உள்ளிட்ட 6 வீரர்கள் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுத் தொடர்பாக 36 பேர் மீதுவழக்குப் பதிவான நிலையில், இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த வித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று டெல்லி நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து காவல்துறையினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 6 வீரகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மூலக்கதை