லலித் மோடி விரைவில் கைதாகலாம்
Saturday, 14 November 2015 07:23
லலித் மோடி விரைவில் கைதாகலாம் என்று புலனாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பல கோடி ரூபாய் அந்நிய நிதி மோசடியில் ஈடுபட்டு சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக லலித் மோடி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை நேரில் ஆஜராக மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்டர் போல் அனுமதியில் ரெட் கார்னரில் கைது செய்து இந்தியா அழைத்து வர உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும் என்று புலனாய்வுப் பிரிவினர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையின் நகலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து லலித் மோடி விரைவில் கைதாகலாம் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.