மறுபடியும் சாம்பியனாகி ரக்பி உலக கோப்பையை தக்கவைத்துக் கொண்ட நியூசிலாந்து!
Sunday, 01 November 2015 02:10
நியூசிலாந்து அணி ரக்பி உலக கோப்பையை மீண்டும் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த உலக கோப்பை ரக்பி தொடர் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது.
உலகின் முதல் இரு நிலை அணிகளான ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மோதிய இப்போட்டியில் 34-17 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து அணி.
கடந்த 2011 உலக கோப்பையை ஏற்கனவே வென்றிருந்த நிலையில் இரண்டாவது முறையாக அடுத்தடுத்து உலக கோப்பையை வென்ற ஒரே அணி எனும் சாதனையை நியூசிலாந்து அணி நேற்று நிகழ்த்தியது.
அதோடு ரக்பி உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே ஒரு நாடு எனும் பெருமையையும் நியூசிலாந்து பெற்றது.
நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே புதிய உக்திகளுடன் தனக்கே உரித்தான உத்வேகத்துடன் விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாவது பாதி நேர ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவின் அடுத்தடுத்த இரு Try முயற்சிகளால் சற்று ஆட்டம் கண்டது. ஆனால் மீண்டும் சளைக்காமல் ஆடி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. போட்டி நாயனகான நியூசிலாந்து அணியின் டான் கார்டன் தெரிவானார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
