உலக கோப்பை ரக்பி 2015 : தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
உலக கோப்பை ரக்பி 2015 : தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து!

Saturday, 24 October 2015 22:31

நியூசிலாந்து - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 20-18 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் உலக கோப்பை ரக்பி இறுதிப் போட்டிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இரு அணிகளுமே மிக ஆக்ரோஷமாக முட்டிமோதிக் கொண்டதுடன் பெரும்பாலான தவறுகளை இழைத்தன. இதனால் நேரம் விரயமானதே மீதமானது.

இரு அணிகளினதும் பெரும்பாலான தவறுகள் பெனால்டி வாய்ப்புக்களையும் கொடுத்திருந்தன.
நாளை ஆர்ஜெண்டீனா - ஆஸ்திரேலிய அணிகள் மற்றைய அறையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நியூசிலந்துடன் மோதவுள்ளது.

மூலக்கதை