சிறுவனை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த இளம்பெண்: அவுஸ்திரேலியாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
தெற்கு வேல்ஸ் நகருக்கு அருகில் கடற்கரை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாரவிடுமுறையை கழிப்பதற்காக அக்கி அவிலா(26) என்ற பெண்ணின் குடும்பத்தினர் நேற்று பிற்பகல் வேளையில் சென்றுள்ளனர்.
அப்போது, அவரது உறவினரின் மகனான 9 வயது சிறுவன் கடற்கரையில் உள்ள பாறைகள் மீது அமர்ந்திருந்தபோது, பெரிய அலை ஒன்று சிறுவனை அடித்துக்கொண்டு கடலுக்குள் சென்றுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அக்கி, சிறுவனை காப்பாற்ற கடலில் குதித்து சிறுவனை நோக்கி சென்றுள்ளார்.
சிறுவனின் தலையை கைப்பற்றி கடற்கரையை நோக்கி நீந்த முயற்சித்தபோது, அலைகளின் வீரியத்தால் அவரால் சிறுவனை பற்றிக்கொண்டு நீந்த முடியவில்லை.
இதனை கண்ட 2 வாலிபர்கள் விரைந்து சென்று இருவரையும் மீட்க முயற்சித்துள்ளனர்.
இந்த சூழலில் பொலிசாருக்கு தகவல் கிடைத்து மீட்பு படகுடன் அங்கு வந்து இருவரையும் கடற்கரைக்கு மீட்டு வந்துள்ளனர்.
சிறுவனிற்கு எந்த ஆபத்தும் நிகழாத நிலையில், அவனை காப்பாற்ற சென்ற அக்கி சுயநினைவின்றி இருந்துள்ளார்.
கடற்கரையில் முதலுதவி அளித்தும் பலனில்லாமல் போனதால், அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அவரை கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக மருத்துவமனையில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் கூறுகையில், அனைவருக்கும் உதவும் குணமுள்ள அக்கி, தன்னுடைய உறவினர் ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு வேல்ஸ் நகர பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
