MH17 விமானம் சுடப்பட்ட விவகாரம்.. நீதியை நிலைநாட்ட எதையும் செய்ய தயார்: அவுஸ்திரேலிய பிரதமர் உறுதி (வீடியோ இணைப்பு)
நெதர்லாந்து தலைநகர் ஆர்ம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி, 298 பேருடன் பயணித்த மலேசியன் ஏர்லைன்ஸின் MH17 விமானம், கிழக்கு உக்ரைன் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியாயினர். இவ்விமானத்தை உக்ரைன் போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தத.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை செய்து வந்த சர்வதேச குழு, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‛ ‘Buk’ ரக ஏவுகணை மூலம் விமானம் தாக்கப்பட்டதாக அறிவித்தது.
ஒலியை விட 3 மடங்கு அதிவேகத்தில் பறக்கும் அந்த ஏவுகணையானது ரேடர் மூலம் வெடிக்க கூடியது. மேலும், தாக்கவேண்டிய இலக்கின் தூரத்திற்கு மிக அருகில் வந்தவுடன் அது தானாகவே வெடிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தின் முகப்பு பகுதிக்கு அருகில் ஏவுகணை கடந்தபோது, ஏவுகனையில் இருந்த ரேடர் இலக்கை அடைந்துவிட்டதாக கருதி தானாக வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பாராளுமன்றத்தில் கூறியதாவது, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரிக்க, சர்வதேச விசாரணை குழு அமைக்க ஐ.நா., முயற்சித்தது அப்போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தடுத்தது.
இது கண்டனத்திற்குரியது. விமானத்திலிருந்த 298 பேரை படுகொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்த தேவையான எந்த முயற்சிகளையும் ஆஸ்திரேலியா மேற்கொள்ளும்.
தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
