இத்தாலி நாட்டில் நாய்கள் குரைத்தால் உரிமையாளருக்கு அபராதம்: அதிரடி உத்தரவிட்ட அரசு
தெற்கு இத்தாலியின் Campania மாகாணத்தில் Controne என்ற நகர் உள்ளது. இந்நகருக்கு Nicola Pastore என்பவர் மேயராக பணியாற்றி வருகிறார்.
இத்தாலிய மக்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்ட பின்னர் சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவது என்பதை ஒரு முக்கிய பழக்கமாகவே பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் அந்நகர் முழுவதும் செல்ல நாய்களை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றின் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அப்பகுதி மக்கள் மதிய உணவு எடுத்துக்கொண்ட பின்னர், குட்டி தூக்கம் போடும்போது நாய்கள் குரைப்பதால் அவர்களின் தூக்கம் பறிபோகிறது என மேயருக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை மேயர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், Controne நகருக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடிமக்களின் மதிய தூக்கத்தை நாய்கள் தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது.
இனிமேல், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நாய்கள் குரைக்காமல் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கையாக கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் நாய்கள் குரைத்து நிரூபிக்கப்பட்டால், அவற்றின் உரிமையாளருக்கு 20 முதல் 500 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும்.
பிற்பகல் வேளை மட்டுமின்றி, இரவு நேரங்களில் கூட நாய்களை குரைக்க உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது என மேயர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
