விம்பிள்டன்:மூன்றாவது முறையாக யாக்கோவிச் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 7-6(7-1),6-7(10-12),6-4,6-3 எனும் செட்கணக்கில் வென்றார்.
மிகவும் பரபரப்பு மிகுந்த இந்தப் போட்டி சிறிது நேரம் மழையின் காரணமாகத் தடைபட்டது.
நோவாக் யாக்கோவிச் மூன்றாவது முறையாக விம்பிள்டன் ஆடவர் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடந்த 2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இப்பட்டத்தை வென்றிருந்தார்.
ஆட்டத்தில் முதல் இரண்டு செட்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றன. முதல் செட்டை யாக்கோவிச் கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டில் பின்தங்கியிருந்த நிலையிலிருந்து மிகவும் அபாரமாக மீண்டுவந்த ஃபெடரர் அதை 7-6 எனும் செட் கணக்கில் வென்றார்.
அதிலும் கடைசி செட்டை டை-பிரேக்கர் முறையில் 12-10 எனும் கணக்கில் வென்றார்.
ஆனாலும் அந்த உத்வேகத்தை அடுத்த இரண்டு செட்களில் அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
இரண்டாவது செட்டை இழந்த நிலையில் அடுத்த இரண்டு செட்களையும் மிகவும் ஆளுமையுடன் ஆடி எளிதாக வென்றார் நோவாக் யாக்கோவிச்.
இந்த இறுதி ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் வென்றிருந்தால், இதுவரை யாரும் செய்திராத வகையில் எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் எனும் பெருமையைப் பெற்றிருப்பார்.ஆனால் அந்த வாய்ப்பை அவர் நழுவவிட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
