ஆறாவது விம்பிள்டன் வென்றார் செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆறாவது முறையாக விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தனது எட்டாவது விம்பிள்டன் இறுதியாட்டத்தில் விளையாடிய செரீனா, ஸ்பெயினின் கார்பீன் முகுரூஸாவை 6-4, 6-4 என்று நேர் செட்களில் வீழ்த்தினார்.
இது செரீனா வில்லியம்ஸ் பெறுகின்ற 21ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.
33 வயதான நிலையில் செரீனா இப்பட்டம் வென்றிருப்பதால் மிக அதிகமான வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையும் அவரைச் சேர்ந்துள்ளது.
இதற்கு முன் இந்த சாதனை மார்ட்டினா நவரத்திலோவா வசம் இருந்தது.
மேலும் சென்ற ஆண்டின் யூ எஸ் ஓபன் தொடங்கி இந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டனை வென்றிருப்பதன் மூலம் நான்கு கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களையும் அடுத்தடுத்து வரிசையாக வென்றவர் என்ற பெருமையை இரண்டாவது முறையாக செரீனா பெற்றுள்ளார்.
செரீனா மட்டுமே இந்த சாதனையை இரண்டு முறை செய்துள்ளதால் இந்த சாதனைக்கே செரீனா ஸ்லாம் என பெயரிட வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ஓபன் எரா எனப்படும் முழுமையாக சர்வதேச மயமான போட்டிகள் ஆரம்பித்த பின்னர், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற சாதனை 22 கிராண்ட் ஸ்லாம்களை வென்ற ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் வசம் தற்போது உள்ளது.
இன்னும் ஒரு ஸ்லாம் வென்றால் அந்த சாதனையை செரீனா சமன் செய்வார்.
ஆனால் அவர் விளையாடுகின்ற விதத்தைப் பார்த்தால், ஸ்டெஃபீயின் சாதனையை செரீனா முறியடிப்பார் என்றே பலரும் கருதுகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
