இத்தாலி தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: தீவிரவாதிகளின் சதி காரணமா?
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் இத்தாலி நாட்டுக்குரிய துணை தூதரகம் அமைந்துள்ளது.
தூதரக அலுவலகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும், இன்று(11.07.15) காலை கார் ஒன்று தூதரக அலுவலகத்திற்கு வந்துள்ளது.சிறிது நேரத்திற்குள், காரில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு பலத்த ஓசையுடம் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில், தூதரக அலுவலகத்தின் முகப்பு பகுதி முழுவதுமாக சேதமடைந்தது.மேலும், இந்த வெடி குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், 2 பொலிசார் மற்றும் 3 பொது மக்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்து குறித்து பேசிய எகிப்து நாட்டு சுகாதார துறை அதிகாரியான Hossam Abdel Ghaffar, கார் வெடி குண்டு தாக்குதல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.வெடிகுண்டு தாக்குதலில் இறந்த நபர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தவரா என உறுதியாக தகவல் கிடைக்கவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முகமது மொர்ஸியை பதவியிலிருந்து நீக்கிய பிறகு, அந்நாட்டில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது.கடந்த 2013ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையில், சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
