சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருடன் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் தங்கிய பெண்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருடன் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் தங்கிய பெண்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவரின் ஹோட்டல் அறையில் இரவு முழுவதும் ஒரு பெண் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சூதாட்ட தடுப்பு பிரிவின் தலைவர் ரவி சவானி பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ளதாகவும், வீரர் அறையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தங்கியது சூதாட்ட தடுப்பு விதிகளுக்கு முரணாணது என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட வீரரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் அறையில் பெண் ஒருவர் தங்கியிருந்தது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மூலக்கதை