இலங்கையில் திடீரென இறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்! இந்தியாவிற்கு ஆபத்தா? (காணொளி) - லங்காசிறி நியூஸ்
அமெரிக்காவின் போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்கியதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி, அமெரிக்க இராணுவத்தின் C-130 சூப்பர் ஹெர்குலஸ் என்கிற பாரிய இராணுவ விமானங்கள், இலங்கையின் முக்கியமான 7 விமானத் தளங்களில் திடீர் திடீரென்று தரையிறங்கின. கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மற்றும் அம்பாறை, அனுராதபுரம், யாழ்ப்பாணத்தின் பலாலி, திருகோணமலை போன்ற விமான நிலையங்களில் இவை தரையிறங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இலங்கையின் அரசாங்கம் மற்றும் படைத்துறையின் அழைப்பை ஏற்றே அந்த விமானங்கள் தரையிறங்கியதாக, இலங்கைக்கான அமெரிக்காவின் தூதராலயம் தெரிவித்தது. ஆனால், அவற்றின் தரையிறக்கம் குறித்து கூறும் இலங்கை ஊடகங்கள், அதற்கான அனுமதி கூறல்கள் எதையும் அரசாங்கத்திடம் முறையாக முன்வைக்காமல், வெறும் குறுகிய நேர முன்னறிவிப்புகளை மாத்ரம் அந்த தரையிறக்கங்கள் இடம்பெற்றதாக கூறுகின்றன. அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அதன் ஒரு இராணுவத்தளமாக விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுவதில், எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தாதா என்ற கேள்வி எழுகிறது. மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
