கொழும்புவில் வெளிநாட்டு துப்பாக்கிகள், 100க்கும் அதிகமான தோட்டாக்களுடன் இருவர் கைது - லங்காசிறி நியூஸ்
வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இரண்டு பேர் கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் துப்பாக்கிகளுடன் இருந்த இரண்டு மர்ம நபர்கள் கைது தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு நேற்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மருதானை, பட்டியாவத்தை பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் துப்பாக்கிகளுடன் சேர்த்து 2 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர் மற்றொரு சந்தேக நபரிடம் துப்பாக்கி தோட்டாக்களை வழங்கியது குறித்து விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இரண்டாவது நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 9mm ரக 75 தோட்டாக்களும், T56 ரகத்தைச் சேர்ந்த 45 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இரண்டாவது நபரும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூடுதல் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
