கிளிநொச்சியில் பேருந்துடன் மோதிய கார்: வாகன விபத்தில் இருவர் பலி - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
கிளிநொச்சியில் பேருந்துடன் மோதிய கார்: வாகன விபத்தில் இருவர் பலி  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் கிளிநொச்சி பகுதிக்கு அருகே நடந்த வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.கிளிநொச்சி பகுதியில் ஏ35 சாலையில் பேருந்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து இருப்பதுடன் 3 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முரசுமோட்டை பகுதியில் நடந்த இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்களில் சம்பந்தப்பட்ட கார் விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கியும், பேருந்து வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கியும் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை