இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளிநபர் ஊடுருவல்: பொலிஸார் விசாரணை - லங்காசிறி நியூஸ்
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வெளிநபர்களால் ஊடுருவப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது. அதில் அதிகாரப்பூர்வ இணையதளம் பல சந்தர்ப்பங்களில் வெளியாட்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று இருப்பதாக கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய இலங்கை நாட்டின் கணினி அவசர தயார்நிலை பிரிவு மற்றும் இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப முகவர் நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அரச இலச்சினை தெளிவற்ற தன்மையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைக்கு பிறகு அத்துறையின் செயலாளர் கடந்த 09ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் ஒன்றை செய்துள்ளார்.இந்த புகாரை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் மட்டத்திலும் உள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
