போலி வங்கி கணக்குகள்... நூதன முறையில் ரூ.11 கோடி மோசடி - ஒடிசாவில் கும்பல் கைது
பூரி, ஒடிசாவின் கந்தமால் மாட்டத்தில் தனிநபர்களின் பெயர்களில் போலியாக வங்கி கணக்குகள் தொடங்கி, அவற்றின் உதவியுடன் நூதன முறையில் ரூ.11 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு ராமேந்திர பிரசாத் கூறும்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள், வெவ்வேறு பெயர்களில் போலியாக வங்கி கணக்குகளை தொடங்கி, சைபர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அவர்கள் பயன்படுத்தி கொள்ள உதவியாக அவற்றை கொடுத்து விடுவார்கள் என்றார். இதற்கு முன்பு, 22 சைபர் குற்ற வழக்குகளில் ரூ.6 கோடி வரை மோசடி நடந்து உள்ளது. இதில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் வெளிவந்தன என கூறினார். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடமிருந்து பல்வேறு வங்கிகளில் தொடங்க்கப்பட்ட 16 போலி வங்கி வைப்பு கணக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து, 8 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு லேப்டாப், 11 மொபைல் போன்கள் மற்றும் பாஸ்போர்ட் ஒன்று ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கும்பலில் ஒருவர் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் செயல்படும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியராக உள்ளார். துசார்காந்தி தாஸ் என்ற அந்நபருடன், குற்றம் சாட்டப்பட்டவர்களான அபினாஷ் மகபத்ரா, கிரண் குமார் பெஹேரா, கோபால் சிங் மற்றும் பாதல் குமார் ஸ்வைன் ஆகிய 4 பேருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.11 கோடி வரை மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சைபர் மோசடியில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பு இருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
