விசுவாசத்துடன் உள்ள கூட்டணி நாடுகளை அமெரிக்கா மிரட்டுவது அதிர்ச்சி தருகிறது: டென்மார்க் எம்.பி.
கோபன்ஹேகன், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரின் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார். வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. வெனிசுலாவில் அத்துமீறி அமெரிக்கா நடந்து கொண்டதற்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது. ரஷியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. ஜப்பான் நாடுகளும், ஐ.நா. அமைப்பும் கூட வெனிசுலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளன. கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் எடுத்து கொள்ளப்படும் என டிரம்ப் பேசி வருவதும் சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில் டென்மார்க்கில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி. ராஸ்மஸ் ஜர்லோவ் நிருபர்களிடம் கூறும்போது, அமெரிக்கா எங்கள் மீது ராணுவ வீரர்களை கொண்டு மிரட்டுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது. ஆழ்ந்த வேதனை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தொடர்ந்து விசுவாசத்துடன் இருந்தது தவிர உங்களுக்கு எதிராக வேறெதுவும் செய்யாத நாடுகளை, கூட்டணி நாடுகளை நீங்கள் மிரட்டுவீர்கள் என்பது அதிர்ச்சி தருகிறது. நினைத்து பார்க்க முடியாதது என அமெரிக்காவின் அச்சுறுத்தலை குறிப்பிட்டு கூறினார். இது பிற நாடுகளுக்கும் கூட வருத்தம் ஏற்படுத்தும். ஏனெனில், டென்மார்க் மீது இதுபோன்று படைகள் கொண்டு மிரட்டல் விடப்படும் என்றால், எந்த நாடும் பாதுகாப்பாக இருக்காது என கூறினார். இதேபோன்று கிரீன்லாந்து பற்றி குறிப்பிட்ட அவர் அந்நாட்டுக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை. ஒரே அச்சுறுத்தல் அமெரிக்காதான். சீனா மிரட்டி வருகிறது என்பது எல்லாம் பொய்யான புனைவுகள். சீனாவின் தூதரகமோ, சுரங்க பணிகளோ, ராணுவ வீரர்களோ கிரீன்லாந்தில் இல்லை என கூறினார்.




சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
