வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை
டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். வங்காளதேசத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவரும் ஒருவர். இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்நிலையில், சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களில் உயிரிழந்து விட்டார். டிசம்பர் மத்தியில் ஏற்பட்ட அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது. இதில், வன்முறை கும்பலின் தாக்குதலில் இந்துக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இதுவரை 6 இந்துக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவராக இருப்பவர் அஜிஜுர் ரகுமான் முசாபீர். அவர் தலைநகர் டாக்காவில் தேஜ்துரி பஜார் பகுதியில் பஷுந்தரா மார்க்கெட்டுக்கு பின்னால் நேற்றிரவு 8.40 மணியளவில் கடுமையாக தாக்கப்பட்டார். மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயமுற்றார். அவருடன் மற்றொரு நபர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில், முசாபீர் கொல்லப்பட்டார். அவருடன் சுடப்பட்டு, காயமடைந்த மற்றொரு நபர் டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்கா நகரின் வடக்கு பகுதிக்கான கட்சியின் தன்னார்வலர் பிரிவுக்கான முன்னாள் பொது செயலாளராக இருந்தவர். வங்காளதேசத்தில் டிசம்பர் மாத மத்தியில் இருந்து பரவி வரும் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் இடைக்கால அரசு திணறி வருகிறது.




சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
