பார் கவுன்சில் தேர்தலில் மாற்றுத்திறனாளி வக்கீல்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க சட்ட திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி,மாநில பார் கவுன்சில் தேர்தலில் மாற்றுத்திறனாளி வக்கீல்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என வக்கீல் பங்கஜ் சின்கா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தற்போதுள்ள சட்டவிதிகள்படி பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க எந்த வாய்ப்பும் இல்லை என இந்திய பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாநில பார் கவுன்சில்களின் பல்வேறு குழுக்களில் பொருத்தமான மாற்றங்களை செய்வதன் மூலம் மாற்றுத்திறனாளி வக்கீல்களின் பிரநிதித்துவத்தை உறுதி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அனைத்துப் பிரிவினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வகையில், சட்ட விதிகளை திருத்தும் செயல்முறையை இந்திய பார் கவுன்சில் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டனர். முன்னதாக, வரவிருக்கும் மாநில பார் கவுன்சில் தேர்தல்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
