லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை
புதுடெல்லி,ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ஐ.ஆர்.சி.டி.சி.க்கு சொந்தமான ஓட்டல்களின் செயல்பாட்டு ஒப்பந்தங்களை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு அதிகாரிகள் மீதும் டெல்லி சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும் லாலு பிரசாத் யாதவ் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சுவர்ண கந்த சர்மா, தற்போதைய நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என அறிவித்தார்.அத்துடன் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
