காங்கிரசுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்க வேண்டும்: சசி தரூர் எம்.பி.
வயநாடு,கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் கலந்துகொண்டு பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகளை கட்சிக்கு உள்ளேயே பேசி தீர்க்க வேண்டும். ஆரோக்கியமான விவாதங்கள் நிலவ வேண்டும். தலைவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கும். அது இயல்பானது. அதனை வெளியில் கூறாமல் கட்சிக்குள் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். ஆனால், பொது மேடைகளில் நாம் ஒன்றாக இணைந்து நின்று கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்கும் போது, கருத்து முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், அதனை சாதுரியமாக கையாள வேண்டும். இந்த விஷயத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல், கட்சி பிளவுபடாமல் காத்து ஒற்றுமையுடன் நின்று நமது கருத்துகளை தெரிவிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் முன்கூட்டியே வேட்பாளர்களை நிர்ணயம் செய்து, பிரசாரம் தொடங்கி கட்சியின் வெற்றிக்கு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
