ஆந்திரா: ரெயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
அமராவதி,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கஞ்ச்வாகா பகுதியை சேர்ந்தவர் வெங்கட ரமணா (வயது 64). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி பின்னர் பணி ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்றப்பின் விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு ஆலையில் வேலை செய்தார். பின்னர், கஞ்ச்வாகா பகுதியில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டத்தால் வெங்கட ரமணாவுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த வெங்கட ரமணா இன்று துவாடா பகுதியில் உள்ள ரெயில் நிலைய பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதிக்கு சென்ற வெங்கட ரமணா அப்போது தண்டவாளத்தில் பெங்களூரு சென்றுகொண்டிருந்த ரெயில் முன் பாய்ந்தார். இதில், வெங்கட ரமணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெங்கட ரமணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
