பகுதிநேர வேலை தருவதாக கூறி ரூ.5.7 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
புதுச்சேரி சேலியமேடு பகுதியை சேர்ந்த நபரின் செல்போனில் டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில் வீட்டில் இருந்தபடி பகுதிநேர வேலை செய்து அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி அவர் தனது விவரங்களை சமர்ப்பித்தார். பகுதிநேர வேலையின்போது அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்தவுடன் அவரின் வங்கி கணக்கில் கணிசமான ஒரு தொகை வரவு வைக்கப்பட்டது. பின்னர் அவர் பணியில் தொடர வேண்டும் என்றால் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பி அவர் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தினார். அதன்பின்னர் அவருக்கு பணிகள் கொடுக்காமல் இணைப்பை துண்டித்தனர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
