மனைவியை கொல்ல.. 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த கணவர்.. வெளியான பரபரப்பு தகவல்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு சோலூர்பாளையா பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவர் பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி, வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இருவரும் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலமுருகன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் கடந்த ஓராண்டாக புவனேஸ்வரி கணவரை பிரிந்து பெங்களூரு ராஜாஜி நகரில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டும் அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந்தேதி வெஸ்ட் ஆப் கார்டு ரோட்டில் புவனேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன் துப்பாக்கியால் புவனேஸ்வரியை சுட்டுக்கொன்றார். இதுகுறித்து மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது பாலமுருகன், மனைவி புவனேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவரை விட்டு பிரிந்து சென்ற புவனேஸ்வரி விவாகரத்து கேட்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற பாலமுருகன் மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக துப்பாக்கிகளை வாங்க அவர் 3 முறை பீகார் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 15 நாட்கள் அவர் பீகாரிலேயே தங்கியிருந்து துப்பாக்கியை எப்படி கையாளுவது என பயிற்சியும் எடுத்துள்ளார். அதன்பிறகே அவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்துள்ளது. முன்னதாக அவர் சேலம் கூலிப்படையை சேர்ந்த ஒருவருக்கு கூலி கொடுத்து மனைவியை கொல்ல ஏற்பாடு செய்துள்ளார். இதனால் பாலமுருகன் தொடர்பு கொண்ட கூலிப்படையை சேர்ந்த நபரை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
