நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது. ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு கமிட்டி இன்று தேர்வு செய்து அறிவிக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காணொலி மூலம் பங்கேற்க உள்ளார். கழுத்து வலி பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள கேப்டன் சுப்மன் கில் அணிக்கு திரும்புகிறார். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் இடம் தான் கேள்விக்குறியாகி உள்ளது. அவர் ஓராண்டுக்கு மேலாக ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு தேர்வாகி இருந்த போதிலும் ஒரு ஆட்டத்திலும் களம் இறக்கப்படவில்லை. ஏனெனில் விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனிக்கிறார். அத்துடன் விஜய் ஹசாரே போட்டியிலும் ரிஷப் பண்டின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. அதனால் அவரை கழற்றி விட்டு, 2-வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு இஷான் கிஷன் அல்லது துருவ் ஜூரெலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 20 ஓவர் போட்டிக்கு முழுமையாக கவனம் செலுத்தும் வகையில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பெயர் பரிசீலிக்கப்படலாம். மற்றபடி ரோகித் சர்மா, விராட் கோலி அணியில் இடம் பெறுவார்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
