இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் புதிய சாதனை: 3,625 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி - லங்காசிறி நியூஸ்
2025ம் ஆண்டில் அதிகப்படியான மருந்து உற்பத்தியை செய்து இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் சாதனை படைத்து இருப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்து இருப்பதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக மேற்கொள்ளப்படும் மாத்திரை உற்பத்தியை மார்ச் மாதத்திலேயே அடைந்து விட்டதாகவும், மார்ச் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 385 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், வரலாற்றில் முதல் முறையாக மருந்து வழங்கல் பிரிவினரால் வழங்கப்பட்ட முன்பதிவு இலக்குகளை எந்தவொரு தட்டுப்பாடும் இல்லாமல் இந்த ஆண்டு செய்து முடித்துள்ளது. அத்துடன் புதிதாக 5 மாத்திரைகளை சந்தைப்படுத்தவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாத்திரை உற்பத்தி சாதனையால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு மொத்த வருமானமாக 27.06 பில்லியன் ரூபாய் பதிவாகி இருப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
