2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன? - லங்காசிறி நியூஸ்
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் புதிய வரி நடைமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. 2026 புத்தாண்டு முதல் இலங்கையில் சூதாட்ட விடுதிகள் (Casino) மற்றும் பந்தய வியாபாரங்களுக்கான அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.(ஜனவரி 01ம் திகதி முதல் புதிய வரி விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தச்) சட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, சூதாட்ட விடுதிகளுக்குள் நுழைவதற்கான நுழைவுக் கட்டணம் இதுவரை 50 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், தற்போது 100 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், இலங்கைப் பிரஜைகள் எவரேனும் சூதாட்ட விடுதிக்குள் நுழையும் போது, குறித்த நிறுவனத்தினர் தலா 100 டொலர் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயம் அல்லது இலங்கை ரூபாயை நுழைவுக் கட்டணமாக அறவிட வேண்டும். பந்தயம் மற்றும் சூதாட்ட வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் செலுத்தி வந்த 15 சதவீத வரி, தற்போது 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதாந்தம் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வருமானத்தை ஈட்டும் பந்தய முகவர்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்களுக்கு இந்த புதிய 18 சதவீத வரி வீதம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி முறைமைக்கு அமைவாக செயற்படுமாறு அனைத்து சூதாட்ட விடுதி உரிமையாளர்களுக்கும், பந்தய வியாபார நிறுவனங்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
