இலங்கையை மீட்டெடுக்க திரண்ட மிகப்பெரிய நிதி: இழப்பீடு வழங்கும் பணி தீவிரம் - லங்காசிறி நியூஸ்
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புயல் வெள்ள பாதிப்புகளால் சிதலமடைந்துள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி கிடைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிதி தொகையானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் கிடைத்து இருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மற்றும் சொத்துகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிதி இழப்பீடுகள் வழங்குவதை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. இதன்படி, சிறிய சொத்துக்களுக்கான உடனடி இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தேவையான தகவல்களை சேகரித்த பின்னரே அவரை வழங்கப்படும் என்றும், இருப்பினும் முதல்கட்ட தொகையை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தற்போது சம்மதம் தெரிவித்து இருப்பதகாவும் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
