இலங்கையை மீட்டெடுக்க திரண்ட மிகப்பெரிய நிதி: இழப்பீடு வழங்கும் பணி தீவிரம் - லங்காசிறி நியூஸ்
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புயல் வெள்ள பாதிப்புகளால் சிதலமடைந்துள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி கிடைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிதி தொகையானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் கிடைத்து இருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மற்றும் சொத்துகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிதி இழப்பீடுகள் வழங்குவதை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. இதன்படி, சிறிய சொத்துக்களுக்கான உடனடி இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தேவையான தகவல்களை சேகரித்த பின்னரே அவரை வழங்கப்படும் என்றும், இருப்பினும் முதல்கட்ட தொகையை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தற்போது சம்மதம் தெரிவித்து இருப்பதகாவும் தெரிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
