வெள்ளத்தில் சேதமடைந்த அரிசிகள் சட்டவிரோதமாக விற்பனை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
வெள்ளத்தில் சேதமடைந்த அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இலங்கையை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த அரிசி வகைகள் சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த சேதமடைந்த அரிசிகள் மனித பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ பகுதியில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1,000 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட அரிசி பறிமுதல் செய்ததாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.இந்நிலையில், நாடு முழுவதும் இது போன்ற சட்ட விரோதமான செயல்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், எனவே யாரும் இது போன்ற முறைகேடான செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுமக்கள் அரிசி வாங்கும் போது, விழிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் இது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க சுகாதார அமைச்சகத்தின் பேரிடர் முகாமைத்துவப் பிரிவின் 24 மணி நேர துரித இலக்கமான 1926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
