இலங்கை உலுக்கிய பேரிடர்: மீட்க களமிறங்கும் பல சர்வதேச நாடுகள் - லங்காசிறி நியூஸ்
பேரிடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவி செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன. இலங்கையில் வெள்ளம் மற்றும் பேரிடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்கா இரண்டு விமானங்களில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். இதற்காக அமெரிக்கா தங்களுடைய இரண்டு C1 30 சரக்கு விமானங்களை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மீட்பு பணிகளுக்காக பல ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். டித்வா புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இலங்கை மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, இருப்பினும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை பாதுகாக்க பல சர்வதேச அமைப்புகள் உதவ வந்துள்ளதாக சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் பல நாட்டு அதிகாரிகள் மீட்பு பணிகள் மற்றும் உதவிகள் தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு பிரான்ஸ், போலந்து, ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்து, நாட்டு மக்களுக்கு தேவையான உதவியை வழங்க தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
