இலங்கைக்கு தமிழக அரசு நிவாரணம்.., இன்று அனுப்பிவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் - லங்காசிறி நியூஸ்
டிட்வா புயலால் பாதிப்படைந்த இலங்கைக்கு, தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணப் பொருள்களை கப்பல் மூலம் அனுப்புகிறார். டிட்வா புயல் பாதிப்புகளில் சிக்கி இலங்கையில் இதுவரை 330க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். இலங்கை பெரும் இயற்கை பேரிடரில் சிக்கிய சூழலில், இந்தியா உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்ள இலங்கைக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பியது. இதனைதொடர்ந்து பல டன் நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 டன் நிவாரணப் பொருள்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுப்புகிறார். தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்களில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருக்கின்றன. மேலும், 10,000 போர்வை, 10,000 துண்டு, 5000 வேட்டி, 5000 சேலை முதலியவற்றுடன் பருப்பு, சர்க்கரை, மாவு போன்றவையும் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பலை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
