அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு
புதுடெல்லி, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் இன்று தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக, வருகிற 5-ந்தேதி வட்டி விகிதம் தொடர்பான முடிவு வெளியிடப்படும். இந்த சூழலில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவடைந்து உள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது. எனினும், அது விரைவில் ரூ.90.13 என வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்தது. இதற்கு முன் நிறைவடைந்த வர்த்தகத்தின்போது, அது ரூ.89.87 என்ற அளவில் இருந்தது. இதுபற்றி அந்நிய செலாவணி நிறுவனம் ஒன்றின் மேலாண் இயக்குநரான அமித் பபாரி என்பவர் கூறும்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் ரூ.88.90 முதல் ரூ.90.20-க்கு இடைப்பட்ட அளவில் இருக்கும். ரூ.89-க்கு கீழ் வருவது என்பது, இறுதியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் வலுவடைவதற்கான உண்மையான முதல் அறிகுறியாக இருக்கும் என நேர்மறையாக கூறினார். டாலர் குறியீடு பலவீனமடைந்திருந்தபோதும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தடைபட்ட நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து உள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
