விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு
விசாகப்பட்டினம்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடி நடைபாலம், விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் 55 மீட்டர் நீளத்தில் கேன்டிலிவர் பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மாநகர வளர்ச்சி ஆணையத்தால் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தின் கண்ணாடிகள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 40 மி.மீ. தடிமன் கொண்ட உயர்தர மூன்று அடுக்கு கண்ணாடி, 40 டன் வலுவூட்டப்பட்ட எஃகு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசும் புயல் மற்றும் சூறாவளி காற்றை தாங்கக் கூடியது.இப்பாலம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் எனவும் 15 நிடங்களுக்கான கட்டணம் ரூ.300 எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
