இந்திய பெண்கள் ஆக்கி அணி பயிற்சியாளர் ராஜினாமா
புதுடெல்லி, இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருந்து வந்த ஹரேந்திர சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இது குறித்து ஹரேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு பயிற்சி அளித்தது எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பம்சமாகும். தனிப்பட்ட காரணங்களுக்கான பயிற்சியாளர் பணியில் இருந்து விலகினாலும், இந்த அசாதாரணமான அணியுடனே எனது இதயம் நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.Harendra Singh has decided to step down as Chief Coach of the Indian Women’s Hockey Team citing personal reasons. Hockey India (@TheHockeyIndia) thanked him for his service and said a replacement will be announced soon. #IndianHockey #HarendraSingh #HockeyIndia pic.twitter.com/7SDzDbL0uRஅமெரிக்க ஆக்கி அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கும் ஹரேந்திர சிங் முன்னதாக 2016-ம் ஆண்டு லக்னோவில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஹரேந்திர சிங் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய பெண்கள் அணி வென்று இருந்தாலும், 2024-25-ம் ஆண்டுக்கான புரோ லீக் போட்டியில் 16 ஆட்டங்களில் ஆடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு, அடுத்த ஆண்டுக்கான போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹரேந்திர சிங் விலகலை அடுத்து இந்திய பெண்கள் ஆக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தை சேர்ந்த சிஜோர்ட் மரிஜின் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-வது இடம் பெற்றபோது அவர் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
