இலங்கையில் மண்ணுக்குள்ள பாதிபேர் போய்ட்டாங்க! மீண்டவர்கள் அதிர்ச்சி தகவல் (காணொளி) - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் மண்ணுக்குள்ள பாதிபேர் போய்ட்டாங்க! மீண்டவர்கள் அதிர்ச்சி தகவல் (காணொளி)  லங்காசிறி நியூஸ்

டிட்வா புயலின் கோரதாண்டவத்தால் இலங்கையின் சில பகுதிகளில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, தஞ்சமடைந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, பெரும்பலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாத்தளை மாவட்டத்தில் அம்பாங்கங்க கோரளை பிரதேசத்திற்கு உட்பட்ட கம்மடுவ, ராகலை, இங்குருவத்த, கோப்பிவத்த போன்ற பிரதேசங்களில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிற்கதியாகியுள்ளனர். அத்துடன் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அங்கே பாதிக்கப்பட்ட மக்கள், இரத்தோட்டை இந்து தேசிய கல்லூரியிலே தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கான ஏற்பாடுகள் அங்கே செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள பௌத்த ஆலயங்களிலும் பிரதேச முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆகவே, அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் ரத்தோட்டை, இந்து கல்லூரி முகாமிற்கு வரும்படியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மக்கள் பாதி பேர் அந்த நிலச்சரிவுக்குள் புதையுண்டுள்ளதாகவும், அப்பிரதேசங்களுக்கு செல்வதற்கான பாதைகள் இல்லாமையால் அம்மக்களை சென்று பார்வையிட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க  

மூலக்கதை