இலங்கையில் 193 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! 228 பேர் மாயம் என தகவல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் 193 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! 228 பேர் மாயம் என தகவல்  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  டிட்வா புயலின் தாக்கத்தினால் இலங்கையில் மோசமான வானிலை நிலவுகிறது. வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் கனமழை காரணமாக பல பகுதிகள் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகின்றன. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,094 பாதுகாப்பான முகாம்களில் 41,005 குடும்பங்களைச் சேர்ந்த 147,931 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாக DMC தெரிவித்துள்ளது. டிட்வா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. 191 பேர் மாயமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக பதுளை மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், குறைந்தது 228 பேர் காணாமல் போயுள்ளதாக DMC உறுதிப்படுத்தியுள்ளது.     

மூலக்கதை